1962ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது, பொது போக்குவரத்தை அரசுடமை ஆக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வருகிறார் தலைவர் கலைஞர். "சோசியலிஸ்ட்" காமராசரால் தீர்மானம் தோற்கடிக்கப்படுகிறது.
1967ல் திமுக வெற்றி பெற்று பேராசான் அண்ணா முதல்வராகிறார். தலைவர் தான் பொதுப்பணித்துறை & போக்குவரத்து துறை அமைச்சர்.
ஒரு கி.மீக்கு 6 பைசா என்று இருந்த பேருந்துக் கட்டணத்தை ஒரு கி.மீக்கு 5 பைசாவாக குறைக்கிறார். அடுத்து, பொது போக்குவரத்தை அரசுடமை ஆக்குகிறார்.
காமராசரால் மறுக்கப்பட்ட ஒரு திட்டத்தை, வெற்றிகரமாக நிறைவேற்றியவர் கலைஞர்.
இன்று தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் பொது போக்குவரத்து சென்று சேர்ந்திருப்பதற்கு கலைஞர் மட்டுமே காரணம்.
- தெற்கிலிருந்து ஒரு சூரியன்.
No comments:
Post a Comment