Sunday, June 7, 2020

ஒரே சமயத்தில் உத்திரப்பிரதேச அரசின் 25 வெவ்வேறு பள்ளிகளில் ஒரே நேர‌த்தில் பணியாற்றிய‌தாக‌ ஆவ‌ண‌ங்க‌ள் உருவாக்கி ஒரு.1 கோடி வரை ஊதியம் என்ற‌ பெய‌ரில் ஏமாற்றி அப‌க‌ரித்த‌ ஆசிரியை ஒருவ‌ர் நேற்று, ஜூன் 6, கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யின் அரசு பள்ளிகளிலும் பிற‌ நிர்வாக‌ துறைக‌ளிலும் பல்வேறு வகை ஊழல் புகார்கள் அடிக்க‌டி வருவது உண்டு. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் தற்போது வெளியாகியுள்ள புகார், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டது.

இம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஸ்தூரிபா காந்தி சிறுமிகள் பள்ளி (கே.ஜி.பி.வி) எனும் பெயரில் நடுநிலைப்பள்ளிகள் நடைபெறுகின்றன. தங்கிப் பயிலும் வசதிகளுடனான இதில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே அமர்த்தப்படுகின்றனர்.

இவர்களில், பெரும்பாலனவர்கள் ஒப்பந்த ஊதியமாக ரூ.30,000 பெறுபவர்கள். இவர்களை பற்றிய விவரங்களை டிஜிட்டல் முறையில் தொகுக்க உ.பி. மாநில கல்வித்துறை முடிவு செய்தது.

கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற‌ பணியில், "அனாமிகா சுக்லா" எனும் பெயரில் ஒரு ஆசிரியை 25 பள்ளிகளின் பதிவேடுகளில் இருப்பது தெரிந்துள்ளது. 

ஒப்பந்த பணியிலான அவர் பிப்ரவரி வரை 13 மாதங்களாக 25 பள்ளிகளிலும் ஊதியம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உபி மாநில அடிப்படை கல்வித்துறை, விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் அனாமிகா சுக்லா போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கீழே ப‌ட‌த்தில் இந்த‌ பூனையும் பால் குடிக்குமாங்க‌ற‌ மாதிரி உக்கார்ந்து இருப்ப‌வ‌ர்தான் செல்வி சுக்லா.

No comments:

Post a Comment