Thursday, June 11, 2020

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்-அதிகாரம்: ஆள்வினையுடைமை குறள் எண்: 619



ஒரு ஊரில் ராமசாமியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். 

அவ‌ர்க‌ள், கிடைக்கின்ற குறைந்த வருமானத்தை வைத்து  வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு நாள் ராமசாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்பொது த‌ரையில் மிகவும் பழங்கால காசு ஒன்று கிடைப்ப‌தை பார்த்தார்.

அந்தக் காசின் நடுவில் ஒரு துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைத்தால் அதிர்ஷ்டம் என்று பெரியோர் அடிக்கடி சொல்லியிருப்பது ராமசாமிக்கு நினைவிற்கு வர‌, உடனே அந்த துளையிட்ட காசை எடுத்து தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

இந்த துளையிட்ட காசு கிடைத்ததால், நிச்சயம் அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், நான் பணக்காரன் ஆகிவிடுவேன் என்று மனதுக்குள் நினைத்தார் ராம‌சாமி.

அந்த காசு கிடைத்த அன்றைய தினத்தில், ராமசாமிக்கு மற்ற நாட்களைவிட அதிக வருமானம் கிடைத்தது. அதிக வருமானம் கிடைத்ததற்கு இந்த அதிர்ஷ்ட‌ காசு தான் கார‌ண‌ம் என்று நினைத்தார். 

அன்று முதல் அந்த அந்த காசை ஒரு சிறு துணியில் பொதிந்து பத்திரமாக ச‌ட்டை பையில் பாதுகாத்து வந்தார். ஒவ்வொருநாள் வெளியே கிளம்பும்போதும் அந்த‌ காசுள்ள‌ துணி பொதியை அன்றைக்கு அணியும் ச‌ட்டைப்பையில் வைத்துவிடுவார்.

இப்படியே சில ஆண்டுகள் கடந்தன...

ராமசாமிக்கு பணம், புக‌ழ், பதவி எல்லாம் வந்து சேர்ந்தது. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம்... "அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது" என்று கூறிக் கொண்டே த‌ன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து பொதியை வெளியே எடுத்தார். பொதியை பிரித்து க‌சை பார்த்த‌தும் ராமசாமி மிகுந்த‌ அதிர்ச்சி ஏற்ப‌ட்ட‌து. 

அதிர்ச்சிக்கு காரணம் என்னனா... அந்த துணிப்பொதியில் இருந்த காசில் துளையே இல்லை. 

என்ன ஆயிற்று...? குழப்பத்துடன் மனைவியைப் பார்த்தார்...

அதற்கு ராமசாமியின் மனைவி, "என்னை மன்னிச்சிருங்க‌, உங்கள் சட்டைல தூசி அதிகமாக இருக்கிறதே என்று எடுத்து வெளியே உதறினேன். அப்போது சட்டைப் பையில் இருந்த காசு தெருவில் விழுந்து விட்டது. நான் வெகுநேரம் தேடியும் அந்த காசு கிடைக்கவில்லை. அதனால் நான்தான் வேறு ஒரு காசை பொதிந்து உங்கள் சட்டைப் பாக்கெட்டில் போட்டு வைத்தேன்" என்றாள். 

"இது எப்போது நடந்தது..?" என்று ராம‌சாமி கேட்க‌, "அது அந்தக் காசு கிடைத்த மறுநாளே.." என்றாள். 

அவர் அமைதியாக சிந்தித்தார். 

உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை, த‌ன்னுடைய நாண‌ய‌மும்,உழைப்பும், விடாமுய‌ற்சியும்தான் என்று புரிந்த‌ ராமசாமி மிகுந்த உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தார்.

அதிர்ஷ்ட‌ம் என்ப‌து நேர‌த்திலோ, பொருளிலோ, ந‌ம்பிக்கையிலோ, சில‌ரின் வாழ்த்திலோ இலை. அது ந‌ம்முடைய‌ தொட‌ர் உழைப்பிலும் தோல்வி க‌ண்டு துவ‌ளா ம‌ன‌ உறுதியிலும்தான் இருக்கிற‌து. இதைத்தான் வ‌ள்ளுவ‌ரும்...

No comments:

Post a Comment