Friday, May 15, 2020

மகதை மண்டலம் வெண்பார்(வெண்பாவூர்) நடுகல் கோயில்.


ஆறகழூர் அருகே ராயப்பனூர் என்ற ஊரை ஆண்ட வன்னிய பாளையக்காரர்கள் காங்கேயமுடையார்கள் என்பவர்களின் முன்னோர்களின் நடுகல் கோயில் நடுவலூர்.

#காங்கேயமுடையார்கள்

பாய் பக்கெட் பிரியாணி - திருச்சியில் சிறந்த ஹைதராபாத் பாசுமதி பிரியாணி

பிரியாணியைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட பிரியாணியை தேடி பிடித்து உண்பது எனது பொழுதுபோக்கு. தமிழ் நாட்டை பொறுத்த வரை இது வரை நான் சாப்பிட்ட பிரியாணிகளிலேயே சிறந்த பிரியாணி வாணியம்பாடி 🌟 பிரியாணி. மேலும் திருச்சி நகரில் அதிகமாக கிடைக்கும் பிரியாணி சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட தம் பிரியாணி. பல முறை பாசுமதி அரிசி பிரியாணியை தேடி அலைந்த அனுபவம் உண்டு. சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவன் அவனது பிறந்த நாளை முன்னிட்டு மதியம் சாப்பிட கள்ளுகுளியில் இருக்கும் பாய் பிரியாணி கடைக்கு அழைத்துச் சென்றான். அது வரை அந்த கடையை பற்றி பெரிதாக கேள்வி பட்டது இல்லை. கடையும் ஆரம்பித்து சில மாதங்கள் தான் ஆகிறது. எனக்கு எப்பவும் போல் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தேன். பிரியாணி பரிமாறப்பட்டது. உண்மையில் பாசுமதி பிரியாணி இதற்கு முன் நான் சென்னை சென்ற போது அதிகமாக விரும்பி உண்ணும் வழக்கம் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு என் முன். சாப்பிட்டு பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பிரியாணி சாப்பிட்ட திருப்தி. விலை ரு 150 மட்டும் தான். சிக்கன் பிரியாணி யின் விலை ரு 80.

அங்கிருந்து கிளம்பும் போது அந்த கடையின் நிறுவனர் திரு தஸ்தகீர் அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்த பிரியாணி வியாபாரத்தில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டுள்ளார். அவர் மேலும் கூறும் போது குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்கி வருவதாக கூறினார்.

நிஜமாகவே எனக்கு விருப்ப உணவாக இப்போது பாய் பிரியாணி மாறிவிட்டது. நீங்களும் திருச்சி செல்ல நேர்ந்தால் கண்டிப்பாக ஒரு முறை சென்று வரவும்.

முகவரி மற்றும் அலைபேசி என்னை இதனுடன் இணைத்துள்ளேன்.

பாய் பக்கெட் பிரியாணி
சிட்டி யூனியன் பைனான்ஸ் எதிரில்
சேது ராமன் பிள்ளை பேருந்து நிறுத்தம் அருகில்
கல்லுக்குலி
திருச்சி 620020
அலைபேசி: 9884189786

Monday, May 11, 2020

உலக செவிலியர்கள் தினம் !


வாழும்
அன்னை தெரசாக்கள்
செவிலியர்கள் !

மனிதநேயம் மிக்கவர்கள்
மனித உயிர் காப்பவர்கள்
செவிலியர்கள் !

நோயாளியின் நோய்
நீக்கும் நேயர்கள்
செவிலியர்கள் !

தன்னைத் தேய்த்து
வாசம் தரும் சந்தனங்கள்
செவிலியர்கள் !

தன்னை உருக்கி
ஒளி தரும் மெழுகுகள்
செவிலியர்கள் !

சங்கடப்படாத
சாதனையாளர்கள்
செவிலியர்கள் !

நொந்து கொள்ளாத
நல்ல உள்ளங்கள்
செவிலியர்கள் !

தூக்கம் தவிர்த்து
காத்து நிற்பவர்கள்
செவிலியர்கள் !

உடல் நலம் பெற
ஓய்வின்றி உழைப்பவர்கள்
செவிலியர்கள் !

தன் உயிர் உருக்கி
பிறர் உயிர் காப்பவர்கள்
செவிலியர்கள் !

இனிய சொல் சொல்பவர்கள்
வன்சொல் சொல்லாதவர்கள்
செவிலியர்கள் !

ஆறுதல் சொல்லி
தேறுதல் தருபவர்கள்
செவிலியர்கள் !

உடல்காயம் மட்டுமல்ல
மனக்காயமும் ஆற்றுபவர்கள்
செவிலியர்கள் !

மருத்துவர்கள் எள் என்றால்
எண்ணையாய் நிற்பவர்கள்
செவிலியர்கள் !

பொறுமையின் சின்னங்கள்
அன்பின் அடையாளங்கள்
செவிலியர்கள் !

ஆண் பெண் இரு பாலிலும்
உள்ள சொக்கத் தங்கங்கள்
செவிலியர்கள் !

Saturday, May 9, 2020

ஸ்வீடனின் நிஜ இளவரசி கரோனா காலத்தில் என்ன செய்தார் தெரியுமா ?

தனியாக ஒரு பண்ணை வீட்டில் 3 மாதங்களுக்கு தேவையான மளிகை சாமான் வாங்கிட்டு ஸ்விம்மிங் பூல் , பார் என்று செட்டில் ஆகவில்லை. அவருக்கு சொந்தமான ஸ்டாக்ஹோமில் உள்ள  மருத்துவமனையில் பணியாளராகச் சென்றார். ( கரோனாவால் ஸ்வீடனில் 24000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். )  .  கிச்சனில் உதவி செய்வது ,  மருத்துவமனை & உபகரணங்களை  ( equipment) சுத்தம் செய்வது ,  கிருமி நாசினி தெளிப்பது ,  போன்ற உதவிகளை செய்து வருகிறார்.  தனக்கு கரோனா பரவி விடுமோ என்று ஊரை விட்டு ஒதுங்கி உயிருக்குப் பயந்து  ஓடாமல் கரோனா இருக்கும் களத்துக்குள்ளே இறங்கி வேலை செய்யும் இளவரசி வாவ்.

அவர் வாலிப வயதிலே தென் ஆப்ரிக்கா, கானா , செனகல் போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளின் நல வாழ்வுக்காக பல பணிகளை மேற்கொண்டவர்.

Saturday, May 2, 2020

ஜோனாஸ் எட்வர்ட் சால்க் - போலியோ தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்

ஜோனாஸ் எட்வர்ட் சால்க் ஒரு அமெரிக்க மருத்துவர், மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் வைராலஜிஸ்ட் ஆவார்.இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??


இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம்) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். 
ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!

பல்லுவன் பாட்டு - கேரளா

                   (photo taken in 1910)

பல்லுவன் பாட்டு என்பது பாம்பு கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் உயர் சாதியினரால் நிகழ்த்தப்படும் பாம்பு வழிபாட்டின் ஒரு வடிவமாகும்.  கேரளாவின் பல்வார் குடிகளின் வாழ்க்கை பாம்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.  அவர்கள் பாம்பு கடவுள்களைத் தங்கள் தெய்வங்களாகக் கருதி பாடல்களைப் பாடுகிறார்கள்.

 பல்லுவன் என்பது பல்லுவர் என்ற தாழ்த்தப்பட்ட சாதிக் குழுவின் ஆண் உறுப்பினர் (பெண் புள்ளுவட்டி).

பலு என்ற சொல்லுக்கு பறவை என்று பொருள்.  பல்லுவன் என்ற சொல்லுக்கு ‘பறவைகளின் சத்தத்திலிருந்து கணிக்கும் நபர்’ என்று பொருள்.  பல்லுவா சமூகத்தில் பல துணைப்பிரிவுகள் உள்ளன.  அவர்களில் பெரும்பாலோர் நாகம்பட்டிகல் (பாம்பு-பாடல்களைப் பாடுபவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.  நாகம்பட்டிகல் இல்லாத புல்லுவர்கள் உள்ளனர்.  அவர்கள் ப்ரீதாம்பட்டிகல் (பேய் பாடல்களைப் பாடுபவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.  சடங்கு நடைபெறும் வீடுகளின் பெண்கள் முல்லுதாரா தேவி கோவிலில் பாம்பு நடனம் செய்கிறார்கள்.

சடங்கு நடைபெறும் வீட்டின் பெண்கள் பாம்பு நடனம் செய்கிறார்கள் (சர்பம் துல்லால். நடன நாளுக்கு ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்கு முன்னர் சிக்கன நடவடிக்கைகள் தொடங்குகின்றன. தூய்மையற்றதாகக் கருதப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள்.

 பாம்பு நடனம் நடைபெறும் விதானம் (பந்தல்) பனை இலைகள், மல்லிகைப் பூக்கள்,  சம்பகா, தாமரை, ஆலமர இலை, வெற்றிலை,  மற்றும் தேங்காய் பூக்களின் கிளைகளால் அலங்கரிக்கப்படும்.  பாம்பின் வடிவம் வெள்ளை அரிசி தூள் மற்றும் வண்ண தூள் கொண்டு வரையப்படுகிறது.  சர்ப்பத்தின் வடிவம் வரையப்பட்ட ஓவியத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட வரிசையில் சடங்கை நடத்துகிறார்.

 நாகராஜா, நாகயாக்ஷி, சர்பயாட்சி, மணினாகம், எரினாகம், கரினாகம், குஜினாகம், பரணாகம் மற்றும் கன்யா என தெய்வங்கள் உள்ளன. 

மரைக்காயர் (மரக்கலராயர்) Maraikkayar


தமிழ் இசுலாமியரில் மரைக்காயர் என்றொரு பிரிவுண்டு.இவர்கள் தமிழ் பூர்வகுடிகளில், இசுலாமியத்தை கிபி6 க்கு பிறகு தழுவிய தமிழர்களே "அரையர்"எனும் மீனவ இனமரபினர்.

மரக்கலங்களை செலுத்தும் தொழில் நுட்பம் தெரிந்த தமிழ் நெய்தல் நிலத்து போர்க்குடிகளே இவர்கள்.
கிபி 10 ம் நூற்றாண்டில் நடந்த காந்தளூர் போருக்குப்பின்னே, நாஞ்சில் நாட்டின் கடற்கரைவாழ் மாந்தரின் வீரத்தை மெச்சியே,மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் இவர்களில் திறமைமிக்கவர்களை தேர்வு செய்து தம்படைகளில் அமர்த்தியதாக வரலாறு கூறுகிறது.
இதில் சேர நாட்டு வில்வித்தையில் சிறந்தவர்கள் வில்லவ+அரையர் வில்லவராயர்கள் என்றழைக்கப்பட்டனர். 
மரக்கலங்களை போர்முனையில் செலுத்தும் திறன் பெற்றவர்கள் மரக்கலம்+அரையர்= மரக்கலஅரையர் என அழைக்கப்பெற்றனர்.
அரையர் இனத்தின் நீட்சியாக மரக்கலஅரையர்- மரக்கலராயர் -மரக்காயர் என திரிபுபெற்ற மரக்காயர் எனும் தமிழ் நெய்தல் குடி இசுலாம் மார்க்கத்தை ஏற்றபின்னே இன்று தமிழகம் முழுதும் விரவிக்கிடக்கின்றனர்.