Saturday, May 2, 2020

மரைக்காயர் (மரக்கலராயர்) Maraikkayar


தமிழ் இசுலாமியரில் மரைக்காயர் என்றொரு பிரிவுண்டு.இவர்கள் தமிழ் பூர்வகுடிகளில், இசுலாமியத்தை கிபி6 க்கு பிறகு தழுவிய தமிழர்களே "அரையர்"எனும் மீனவ இனமரபினர்.

மரக்கலங்களை செலுத்தும் தொழில் நுட்பம் தெரிந்த தமிழ் நெய்தல் நிலத்து போர்க்குடிகளே இவர்கள்.
கிபி 10 ம் நூற்றாண்டில் நடந்த காந்தளூர் போருக்குப்பின்னே, நாஞ்சில் நாட்டின் கடற்கரைவாழ் மாந்தரின் வீரத்தை மெச்சியே,மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் இவர்களில் திறமைமிக்கவர்களை தேர்வு செய்து தம்படைகளில் அமர்த்தியதாக வரலாறு கூறுகிறது.
இதில் சேர நாட்டு வில்வித்தையில் சிறந்தவர்கள் வில்லவ+அரையர் வில்லவராயர்கள் என்றழைக்கப்பட்டனர். 
மரக்கலங்களை போர்முனையில் செலுத்தும் திறன் பெற்றவர்கள் மரக்கலம்+அரையர்= மரக்கலஅரையர் என அழைக்கப்பெற்றனர்.
அரையர் இனத்தின் நீட்சியாக மரக்கலஅரையர்- மரக்கலராயர் -மரக்காயர் என திரிபுபெற்ற மரக்காயர் எனும் தமிழ் நெய்தல் குடி இசுலாம் மார்க்கத்தை ஏற்றபின்னே இன்று தமிழகம் முழுதும் விரவிக்கிடக்கின்றனர்.

No comments:

Post a Comment