Friday, May 15, 2020

பாய் பக்கெட் பிரியாணி - திருச்சியில் சிறந்த ஹைதராபாத் பாசுமதி பிரியாணி

பிரியாணியைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட பிரியாணியை தேடி பிடித்து உண்பது எனது பொழுதுபோக்கு. தமிழ் நாட்டை பொறுத்த வரை இது வரை நான் சாப்பிட்ட பிரியாணிகளிலேயே சிறந்த பிரியாணி வாணியம்பாடி 🌟 பிரியாணி. மேலும் திருச்சி நகரில் அதிகமாக கிடைக்கும் பிரியாணி சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட தம் பிரியாணி. பல முறை பாசுமதி அரிசி பிரியாணியை தேடி அலைந்த அனுபவம் உண்டு. சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவன் அவனது பிறந்த நாளை முன்னிட்டு மதியம் சாப்பிட கள்ளுகுளியில் இருக்கும் பாய் பிரியாணி கடைக்கு அழைத்துச் சென்றான். அது வரை அந்த கடையை பற்றி பெரிதாக கேள்வி பட்டது இல்லை. கடையும் ஆரம்பித்து சில மாதங்கள் தான் ஆகிறது. எனக்கு எப்பவும் போல் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தேன். பிரியாணி பரிமாறப்பட்டது. உண்மையில் பாசுமதி பிரியாணி இதற்கு முன் நான் சென்னை சென்ற போது அதிகமாக விரும்பி உண்ணும் வழக்கம் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு என் முன். சாப்பிட்டு பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பிரியாணி சாப்பிட்ட திருப்தி. விலை ரு 150 மட்டும் தான். சிக்கன் பிரியாணி யின் விலை ரு 80.

அங்கிருந்து கிளம்பும் போது அந்த கடையின் நிறுவனர் திரு தஸ்தகீர் அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்த பிரியாணி வியாபாரத்தில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டுள்ளார். அவர் மேலும் கூறும் போது குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்கி வருவதாக கூறினார்.

நிஜமாகவே எனக்கு விருப்ப உணவாக இப்போது பாய் பிரியாணி மாறிவிட்டது. நீங்களும் திருச்சி செல்ல நேர்ந்தால் கண்டிப்பாக ஒரு முறை சென்று வரவும்.

முகவரி மற்றும் அலைபேசி என்னை இதனுடன் இணைத்துள்ளேன்.

பாய் பக்கெட் பிரியாணி
சிட்டி யூனியன் பைனான்ஸ் எதிரில்
சேது ராமன் பிள்ளை பேருந்து நிறுத்தம் அருகில்
கல்லுக்குலி
திருச்சி 620020
அலைபேசி: 9884189786

No comments:

Post a Comment