Thursday, June 18, 2020

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்


முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள்கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம்
  • கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் போசாள மன்னன் வீரராம நாதனை தோற்கடித்து அவன் தளபதி சோமன் என்பவனைக் கொன்றான்.
  • இலங்கையின் திரிகோணமலையில் ஆட்சி செய்த தம்பர்லிங்கா(தாய்லாந்து) அரசன் சந்திரபானுவின் மீது படையெடுத்து வெற்றி பெற்று யானைகள் மற்றும் மணிகள் அனைத்தினையும் திறையாகப் பெற்றான்.
  • பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.
  • தெலுங்குச் சோழ மன்னனான விசயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். வடநாடு சென்று காகதீய மன்னன் கணபதியைப் போரில் வென்றான். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.

Monday, June 15, 2020

இன்னக்கி எல்லா ஊருக்கும் எப்புடி பஸ் ஓடுதுன்னு தெரியுமா ?


1962ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது, பொது போக்குவரத்தை அரசுடமை ஆக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வருகிறார் தலைவர் கலைஞர். "சோசியலிஸ்ட்" காமராசரால் தீர்மானம் தோற்கடிக்கப்படுகிறது. 

1967ல் திமுக வெற்றி பெற்று பேராசான் அண்ணா முதல்வராகிறார். தலைவர் தான் பொதுப்பணித்துறை & போக்குவரத்து துறை அமைச்சர். 

ஒரு கி.மீக்கு 6 பைசா என்று இருந்த பேருந்துக் கட்டணத்தை ஒரு கி.மீக்கு 5 பைசாவாக குறைக்கிறார். அடுத்து, பொது போக்குவரத்தை அரசுடமை ஆக்குகிறார். 

காமராசரால் மறுக்கப்பட்ட ஒரு திட்டத்தை, வெற்றிகரமாக நிறைவேற்றியவர் கலைஞர். 

இன்று தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் பொது போக்குவரத்து சென்று சேர்ந்திருப்பதற்கு கலைஞர் மட்டுமே காரணம்.

- தெற்கிலிருந்து ஒரு சூரியன்.

#மாஸ்க் பற்றி ஒரு அலசல்போலீசுக்கு பயந்து வாங்கறீங்களா இல்ல கொரோனா வுக்கு பயந்து மாஸ்க் போடுறீங்களா???



நாம் போடுகிற மாஸ்கின் தன்மை பற்றி இதோ விரிவாக.....

N 95 மாஸ்க் , இல்ல சர்ஜிகல் மாஸ்க் - இது ரெண்டு தவிர வேற எதாலயும் கொரோனா வைரஸ்ஸ தடுக்க முடியாது..

பாவாட துணிலயும் , பனியன் துணியிலயும் , போர்வை துணிலயும் மாஸ்க் போட்டுகிட்டு கொரோனாவ -  வாடா வாடா வந்து பாருடான்னு சண்டைக்கு கூப்டுகிட்டு இருக்கோம்.. சாதாரண வைரஸ்ஸ விட மூன்றில் ஒரு பங்கு சிறியது கொரோனா .. துணியில் இருக்கும் துளைகள் கொரோனாக்கு பொருட்டே இல்லை ..உடனே பரவி விடும்...  N95 மாஸ் எல்லாராலும் வாங்க முடியாது ..தரமானது ஆரம்ப விலையே 300 ஐ தாண்டும்..ஆனால் சர்ஜிகள் மாஸ்க் ஒன்று 5 ரூபாதான்..ஒன்ஸ் யூஸ்
.தினமும் ஒன்ன யூஸ் பண்ணிட்டு டிஸ்போஸ் பண்ணிடலாம்.. மற்ற துணி மாஸ்க்குகள் எந்த விதத்திலயும் நம்மைக் காப்பாற்றாது..தூசி மட்டுமே உள்ளே போகாமல் தடுக்கும்..வைரஸ் - பாக்டீரியாவைத் தடுக்காது... 

நாம யாருமே கொரோனாக்காக மாஸ்க் போடல.. போலீஸ்ஸுக்கு பயந்துதான். போடரோம்..அதுவும் 10 ரூபாய்க்கு துணி மாஸ்க் வாங்கி , ஒரு மாசத்துக்கு தொவைச்சு யூஸ் பண்ணிகிட்டு இருக்கோம்..இது ஆபத்தானது.. உண்மையச் சொன்னா மாஸ்க்குக்கு எல்லாம் கட்டுப்படர  ஜீவன் இல்ல கொரோனா ..

நம்ம ஊருல அதிகம் பரவல..அதால போலீஸ்க்கு கணக்கு காட்ட வேனும்னா இந்த துணி மாஸ்க்குகள் பயண்படலாம்..ஒரு வேளை பரவிருச்சுனா - துணி மாஸ்க்குகள் உயயோகிக்காதீர்.. ரீ யூஸ் பண்லாம்கிரத தவிர வேற யூஸ் இல்ல..

ராம்ராஜ்ல இருந்து - பூமர் கம்பெனி வரைக்கும்.- இன்னிக்கு டிவில மாஸ்க் விளம்பரம் போடராங்க..இவங்க தயாரிச்ச மாஸ்க் பாதுகாப்பானதுன்னு எங்க அப்ரூவல் வாங்கிருப்பாங்க ? இண்டியன் மெடிக்கல் சர்டிபிகேட் இருக்கா ? எதுவும் இல்ல.. டிசைனா - ரிச்சா தெரியும்..அவ்வளவுதான்.. மக்கள் அறியாமையும் பதட்டத்தையும் பயண்படுத்தி சீசன் பிஸ்ணஸ் அவ்ளோதான்..

இது நா சொல்லல..உலக சுகாதார அமைப்பு விட்ட அறிக்கை.. வெளிய தெரியாம வச்சுக்கிரதுல மீடியாவும் முக்கிய பங்கு வகிக்குது.. கொரானா எங்கயும் இல்ல..நம்மள சுத்தி நெருங்கிகிட்டு இருக்கு.. தினம் 10 ந்னு சொன்னப்ப பயந்த நாமதான் இப்ப தினம் 1000 + ந்னு சொன்னாலும் ஜஸ்ட் ஒரு நியூஸ்ஸா கடந்து போரோம்..எங்க போய் முடிம்னு தெர்ல..

அரசு இயந்தரத்துக்கு மக்கள் சாவு ஒரு கணக்குதான்.. அதுக்கு அரசாங்கம் என்ன பண்ணும் ? பரிதாபப்பட மட்டுந்தா முடியும்.. நாம இல்லன்னா நம்ம குடும்பம் இல்லன்னு இருக்கிர நிலமைல கவனமா இருந்துக்கு வேண்டியது யாரு ?

கொரொனாவும் - ஆக்ஸிடெண்டும் ஒன்னுதான்..நாம என்னதான் கவனமா டிரைவிங் பண்ணாலும் ஆப்போஸிட்ல வர்ரவன் அடிச்சு தூக்கிருவான்.. அதுதான் இப்பவும் நடந்துகிட்டு இருக்கு..

சொல்லவே கஸ்டமா இருக்கு.. அமெரிக்கா சீனா இத்தாலிய மிஞ்சும் பாதிப்புகள் இந்த மாதத்தில் இருந்து துவங்கபட வாய்ப்பிருக்கு... 
வறுமைக்கும், கடனுக்கும், வாடகைக்கும் பயந்து தொழில் பண்ணியே ஆகனும்கிர நிலைமைல இருக்கிர நமக்கு காசு மட்டுந்தா கண்ணுக்கு தெரிது.. கூடவேதான் சாவும் வருதுங்கிரது புரிஞ்சுக்க வேண்டிய உண்மை..

2020 தாண்டிட்டா லைப் டைம் செட்டில்மென்றான்னு  கடவுள் டாஸ்க் வச்சுருக்கார் போல..
மும்மத கடவுள வேண்டியும் புரயோசனம் இல்ல.

நானும் இது தெரியாமல் துனியால் செய்யப் பட்ட மாஸ்கை தான் துவைத்து போட்டு பயன் படுத்தி வந்தேன்.
ஆனால் சர்ஜிக்கல் மாஸ்க் நூற்றுக்கணக்கில் வைத்திருக்கேன் இனி அதைத்தான் பயன் படுத்தனும்.

Saturday, June 13, 2020

O க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது / மிக அரிதாக வரும்


O க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு 
கொரோனா வராது / மிக அரிதாக வரும்
என்று ஒரு அமெரிக்க ஆய்வு முடிவைக் கொண்டு பல செய்திகள் நம்மிடையே வலம் வருகின்றன 

அது குறித்த எனது குறு விளக்கம் நேற்று நியூஸ்18 தொலைக்காட்சியில் வெளியானது 

இங்கு நம் சொந்தங்களுக்கும் அது குறித்த எனது விளக்கம் பின்வருமாறு 

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 7.5 லட்சம் கொரோனா நோயாளிகளை 
வைத்து செய்யப்பட்ட மீளாய்வில் அவர்களிடம் இருந்து கண்டறியப்பட்டதாக கூறப்படும் செய்தி தான் 

"O" ரத்த வகையினருக்கு  மற்ற வகையினரை விடவும் 9-18% கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறியிருக்கின்றனர் 

அவர்களும் கூட O ரத்த வகயினருக்கு முற்றிலும் முதலுமாக கொரோனாவே வராது என்று கூறவில்லை 

காரணம் அவர்கள் ஆராய்ச்சி செய்த அமெரிக்காவில் வாழும் கருப்பு இன அமெரிக்கர்களுள் "ஓ" வகை ரத்தம் இருப்பவர்களுக்கு ஏனைய உலகவாசிகளை விட அதிக அளவு தொற்று ஏற்பட்டுள்ளது. 

மேலும் அந்த ஆய்வின் முடிவில் AB ரத்த க்ரூப் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம் 
என்றும் கூறப்படுகிறது 

இந்த வகை ஆய்வுகளை 
Correlation study என்போம் 

அதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்பு சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து அந்த இடத்தில் இருந்தவர்கள் மீது பழி சுமத்துவது போன்றதாகும். 

உதாரணத்துக்கு ஒரு க்ரைம் ஸ்டோரியை கற்பனை செய்து கொள்வோம். 

ஒருவரின் சாட்சியம் இது 

தூரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. 
நான் பால்கனியில் இருந்து பார்த்தேன். 
அப்போது ஒருவர் சரிந்து விழுந்து கிடந்தார். 
இன்னொருவர் தலையில் தொப்பியுடன் அந்த இடத்தை விட்டு ஓடினார் 

  இதுவே சாட்சியம்

அவர் கூறும் ஆதாரங்களை வைத்து அந்த கொலை காரன் தலையில் தொப்பி மாட்டியிருந்தது தெரிகிறது என்று போலீஸ் கூறினால் சரியாக இருக்குமா? 

மேலும் அவர் தலையில் முடி இல்லாமல் இருந்ததால் அதை மறைக்கவே தொப்பி மாட்டியிருக்கிறார்

எனவே தலையில் முடியில்லாதவர்களை நாம் உடனே விசாரிக்க வேண்டும்.  

தலையில் நன்றாக முடி வைத்திருப்பவர்களை வெளியே சுற்ற விடுங்கள் என்றும் கூறுவது அபத்தமான ஒன்றாகத்தானே இருக்கும். 

அது போல தான் பல நேரங்களில் இந்த Correlation studyகளும் அமைந்து விடும். 

இதே போன்ற ஒரு ஆய்வு முடிவு தலை சொட்டையாக இருக்கும் ஆண்களுக்கு கோவிட்19 வந்தால் மிகவும் ஆபத்தான ஒன்றாக முடியும் என்று கூறியது. 

ஆனால் அதன் உண்மை நிலை என்ன? 

யாருக்கு கோவிட்19 பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது? 
70 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு. 
அவர்கள் தலையில் முடியிருக்குமா? 
சொட்டையாக இருப்பார்களா? 

அவர்களுள் 95% பேருக்கு தலையில் முடி இருக்காது. 

இதை வைத்து ஆய்வு முடிவு வெளியிட்டு 
சிறு வயதில் தலையில் சொட்டை விழும் பலரை பயமுறுத்துகிறார்கள் 

இதே போன்று தான் இந்த ரத்த வகை குறித்த ஆய்வு முடிவுமாகும் 

கோவிட் 19 வருவதற்கு
வெறும் 9-18% குறைவான ரிஸ்க் "ஓ" வகையினருக்கு இருக்கிறது 

ஏபி ரத்த வகையினருக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்று கூறுகின்றனர்
இதுவும் ஒரு சந்தர்ப்பங்களைஅடிப்படையாக வைத்து செய்யப்படும் ஆய்வாகும் 

சந்தரப்பங்கள் முழுவதும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை 

Correlation is Not causation 

எனவே 

ஓ ரத்த வகை கொண்ட மக்கள் இந்த ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு சகஜமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வெளியே சுற்றித்திரியலாம் என்றும் நினைக்க வேண்டாம். 

மற்ற வகை நண்பர்கள் நமக்கு கொரோனா வந்துவிடும் என்று அஞ்சி நடுங்கவும் வேண்டாம். 

கொரோனா தொற்று வரும் வாய்ப்பு 
அனைத்து ரத்த வகையினருக்கும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கிறது. 

நமது அலட்சியம் அதை இன்னும் எளிதாக்கிவிடக்கூடாது 

அலட்சியமும் அச்சமும் தேவையில்லை 

எச்சரிக்கை உணர்வு போதுமானது.

Dr.A.B. ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

Friday, June 12, 2020

புத்தர் தேடிய புத்தொளி

கௌதம புத்தரின் கடுந்தவப் பயிற்சியானது  ஆறாண்டு காலம் நீடித்தபோதிலும், அவர் எண்ணிய புத்தொளியை அவரால் காண முடியவில்லை...

உலகத் துன்பத்திற்கான காரணத்தையும், அத்துன்பத்தை தீர்ப்பதற்கான தீர்வையும் அவரால் அறிய முடியவில்லை...

அவர் கொடும்பசியால் துன்புற்று  நிரஞ்சனை ஆற்றங்கரையின் அருகில் இருந்த ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்...

அப்போது அவர், பசியாலும், தாகத்தினாலும்  உடல் மெலிந்து, மனம் தடுமாறி போகும் ஒருவனால் புத்தொளியைக் காண முடியாது என்பதை உணர்ந்தார்...

மன அமைதி இல்லாத ஒருவனால் மனதினால் அடையக்கூடிய இலக்கை அடைய முடியாது என்பதையும், உடலின் தேவைகள் தீர்க்கப்படுவதன் மூலம்தான் உண்மையான அமைதி கிடைக்கும் என்று கருதினார்...

எண்ணம்தான் எல்லாவற்றி்ற்கும் அடிப்படையாக இருக்கிறது என்றும்,   ஒருவரது உடல் செயல்படுவதும், செயல்படாமல் இருப்பதும் அவரது எண்ணத்தின் அடிப்படையில்தான் என்று கருதினார்...

எண்ணம் இன்றி இயங்கும் உடல் நாயைப் போன்றது என்றும், அதனால் எண்ணங்களை கட்டுப்படுத்துவதுதான் சரியான வழிமுறை என்றும் கண்டுணர்ந்தார்...

அவரது கடும் விரத முறைப் பயிற்சியானது முழுமையான அறிவைப் பெறுவதற்கோ அல்லது விடுதலைப் பெறுவதற்கோ பயன்படாது என்று கருதி்யவர்,அதை கைவிட்டு ஔியைத் தேடி வேறிடம் செல்ல எண்ணினார்....

            பாபாசாகேப் அம்பேத்கர்

Thursday, June 11, 2020

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்-அதிகாரம்: ஆள்வினையுடைமை குறள் எண்: 619



ஒரு ஊரில் ராமசாமியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். 

அவ‌ர்க‌ள், கிடைக்கின்ற குறைந்த வருமானத்தை வைத்து  வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு நாள் ராமசாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்பொது த‌ரையில் மிகவும் பழங்கால காசு ஒன்று கிடைப்ப‌தை பார்த்தார்.

அந்தக் காசின் நடுவில் ஒரு துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைத்தால் அதிர்ஷ்டம் என்று பெரியோர் அடிக்கடி சொல்லியிருப்பது ராமசாமிக்கு நினைவிற்கு வர‌, உடனே அந்த துளையிட்ட காசை எடுத்து தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

இந்த துளையிட்ட காசு கிடைத்ததால், நிச்சயம் அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், நான் பணக்காரன் ஆகிவிடுவேன் என்று மனதுக்குள் நினைத்தார் ராம‌சாமி.

அந்த காசு கிடைத்த அன்றைய தினத்தில், ராமசாமிக்கு மற்ற நாட்களைவிட அதிக வருமானம் கிடைத்தது. அதிக வருமானம் கிடைத்ததற்கு இந்த அதிர்ஷ்ட‌ காசு தான் கார‌ண‌ம் என்று நினைத்தார். 

அன்று முதல் அந்த அந்த காசை ஒரு சிறு துணியில் பொதிந்து பத்திரமாக ச‌ட்டை பையில் பாதுகாத்து வந்தார். ஒவ்வொருநாள் வெளியே கிளம்பும்போதும் அந்த‌ காசுள்ள‌ துணி பொதியை அன்றைக்கு அணியும் ச‌ட்டைப்பையில் வைத்துவிடுவார்.

இப்படியே சில ஆண்டுகள் கடந்தன...

ராமசாமிக்கு பணம், புக‌ழ், பதவி எல்லாம் வந்து சேர்ந்தது. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம்... "அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது" என்று கூறிக் கொண்டே த‌ன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து பொதியை வெளியே எடுத்தார். பொதியை பிரித்து க‌சை பார்த்த‌தும் ராமசாமி மிகுந்த‌ அதிர்ச்சி ஏற்ப‌ட்ட‌து. 

அதிர்ச்சிக்கு காரணம் என்னனா... அந்த துணிப்பொதியில் இருந்த காசில் துளையே இல்லை. 

என்ன ஆயிற்று...? குழப்பத்துடன் மனைவியைப் பார்த்தார்...

அதற்கு ராமசாமியின் மனைவி, "என்னை மன்னிச்சிருங்க‌, உங்கள் சட்டைல தூசி அதிகமாக இருக்கிறதே என்று எடுத்து வெளியே உதறினேன். அப்போது சட்டைப் பையில் இருந்த காசு தெருவில் விழுந்து விட்டது. நான் வெகுநேரம் தேடியும் அந்த காசு கிடைக்கவில்லை. அதனால் நான்தான் வேறு ஒரு காசை பொதிந்து உங்கள் சட்டைப் பாக்கெட்டில் போட்டு வைத்தேன்" என்றாள். 

"இது எப்போது நடந்தது..?" என்று ராம‌சாமி கேட்க‌, "அது அந்தக் காசு கிடைத்த மறுநாளே.." என்றாள். 

அவர் அமைதியாக சிந்தித்தார். 

உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை, த‌ன்னுடைய நாண‌ய‌மும்,உழைப்பும், விடாமுய‌ற்சியும்தான் என்று புரிந்த‌ ராமசாமி மிகுந்த உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தார்.

அதிர்ஷ்ட‌ம் என்ப‌து நேர‌த்திலோ, பொருளிலோ, ந‌ம்பிக்கையிலோ, சில‌ரின் வாழ்த்திலோ இலை. அது ந‌ம்முடைய‌ தொட‌ர் உழைப்பிலும் தோல்வி க‌ண்டு துவ‌ளா ம‌ன‌ உறுதியிலும்தான் இருக்கிற‌து. இதைத்தான் வ‌ள்ளுவ‌ரும்...

Sunday, June 7, 2020

ஒரே சமயத்தில் உத்திரப்பிரதேச அரசின் 25 வெவ்வேறு பள்ளிகளில் ஒரே நேர‌த்தில் பணியாற்றிய‌தாக‌ ஆவ‌ண‌ங்க‌ள் உருவாக்கி ஒரு.1 கோடி வரை ஊதியம் என்ற‌ பெய‌ரில் ஏமாற்றி அப‌க‌ரித்த‌ ஆசிரியை ஒருவ‌ர் நேற்று, ஜூன் 6, கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யின் அரசு பள்ளிகளிலும் பிற‌ நிர்வாக‌ துறைக‌ளிலும் பல்வேறு வகை ஊழல் புகார்கள் அடிக்க‌டி வருவது உண்டு. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் தற்போது வெளியாகியுள்ள புகார், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டது.

இம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஸ்தூரிபா காந்தி சிறுமிகள் பள்ளி (கே.ஜி.பி.வி) எனும் பெயரில் நடுநிலைப்பள்ளிகள் நடைபெறுகின்றன. தங்கிப் பயிலும் வசதிகளுடனான இதில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே அமர்த்தப்படுகின்றனர்.

இவர்களில், பெரும்பாலனவர்கள் ஒப்பந்த ஊதியமாக ரூ.30,000 பெறுபவர்கள். இவர்களை பற்றிய விவரங்களை டிஜிட்டல் முறையில் தொகுக்க உ.பி. மாநில கல்வித்துறை முடிவு செய்தது.

கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற‌ பணியில், "அனாமிகா சுக்லா" எனும் பெயரில் ஒரு ஆசிரியை 25 பள்ளிகளின் பதிவேடுகளில் இருப்பது தெரிந்துள்ளது. 

ஒப்பந்த பணியிலான அவர் பிப்ரவரி வரை 13 மாதங்களாக 25 பள்ளிகளிலும் ஊதியம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உபி மாநில அடிப்படை கல்வித்துறை, விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் அனாமிகா சுக்லா போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கீழே ப‌ட‌த்தில் இந்த‌ பூனையும் பால் குடிக்குமாங்க‌ற‌ மாதிரி உக்கார்ந்து இருப்ப‌வ‌ர்தான் செல்வி சுக்லா.