Thursday, April 30, 2020

சென்னையில் ஏன் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்படுகிறார்கள்?



சென்னையில் இதுவரை கண்டறியப்பட்ட நோய் தொற்றாளர்களுள் 98% பேர் அறிகுறிகள் ஏதுமற்ற தொற்றாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

சென்னை சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெருநகரமாகும். 
சென்னையின் மக்கள் தொகை அடர்த்தி 
ஒரு சதுர கிலோமீட்டருக்கு 27000 பேர். 

நோய் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களைக் கண்டறிய நம்மிடம் இருக்கும் ஒரே அஸ்திரம்- பரிசோதனை மட்டுமே. 

தமிழ்நாட்டிலேயே அதிகமான பரிசோதனைகள் சென்னை பெருநகரத்தில் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக நோய் தொற்று கண்டறியப்படுவதும் அதிகமாக இருப்பது இயற்கையானதே 

ஏற்கனவே இருக்கும் நோய் தொற்றாளர்களை  அதிகமான பரிசோதனை மூலம் தற்போது கண்டறிந்து வருவது ஆரோக்கியமானது 

அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவது மூலம் தொற்று பரவும் சங்கிலி அறுபடும். 

ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெருநகரில் தினமும் 100 முதல் 150 தொற்றாளர்கள் கண்டறியப்படுவது என்பது மிகச் சாதாரணமானது.  

எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. 

அதிகமான பரிசோதனைகள்  செய்யப்படும் போது 
நோய் தொற்றாளர்கள் வெளியே தெரிவது இயற்கை 

இது நன்மைக்கே..

 மற்ற மாவட்ட மக்கள் சென்னை சொந்தங்களை கரித்துக்கொட்ட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் 

அவர்களின் ஊரில் நாம் இல்லை 
அவர்கள் வாழும் வாழ்க்கையை நாம் வாழவில்லை.
எனவே அவர்களுக்கு ஆறுதல் கூறுவேண்டுமே அன்றி அவர்களை குற்றம் கூறி புண்படுத்தக்கூடாது 

அவர்கள் நல்ல முறையில் ஊரடங்கை கடைபிடிப்பதால் தான் 
நூறு நோய் தொற்று என்று ஏறுகிறது 

இல்லாவிடில் இந்நேரம் அங்கு மட்டும் லட்சம் தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் 

Source : Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

No comments:

Post a Comment