Thursday, April 30, 2020

களத்தில் பொறந்த ஊருக்கு புகழ சேரு - புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே காந்தி நகர் 6ஆம் தெருவில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்...

அவர்களின் வருமானம் ஊரடங்கு சட்டத்திற்கு முன்பே கேள்விக்குறியாக தான் இருக்கும்...

தற்போது உள்ள ஊரடங்கு  சட்டத்தால் மேலும் அவர்கள் வாழ்க்கை கேள்வி கேட்பாரின்றியே அமைந்து விட்டது... 

அங்கு பொறந்த ஊருக்கு புகழ சேரு அமைப்பை சேர்ந்த தோழர்கள் அவர்களுக்கு தேவையான 150 லிட்டர் பால் அரிசி காய்கறிகள் சமையல் எண்ணெய் சேமியா பாக்கெட் பிஸ்கட் மற்றும் மினரல் வாட்டரோடு அவர்கள் வசிக்கும் புதுக்கோட்டை காந்திநகர் 6-ஆம் வீதிக்கு சென்று 80 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

கணேஷ் நகர் துணை ஆய்வாளர் திரு குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பு வழங்கினார்  ..

நன்றி : பொறந்த ஊருக்கு புகழ சேரு
Pops

No comments:

Post a Comment